2024 திருச்செந்தூரில் மாசித்திருவிழா

2024 திருச்செந்தூரில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று[14.02.2024] தொடங்கியது!

திருச்செந்தூர் மாசி திருவிழா 2024 கொடியேற்றத்துடன் இன்று[14.02.2024] ஆரம்பம்!

முருகனின் அறுபடை வீடுகளில் 2-வதுபடை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசித்திருவிழா இன்று[14/02/2024] புதன் கிழமை கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. காலை 4.52 மணிக்கு கோவில் செப்பு கொடி மரத்தில் மாசித்திரு விழா கொடியேற்றம் சிறப்பாக நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடை பெற்றது. அதற்கு பிறகு மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

2024 மாசித் திருவிழாவின் முக்கிய விழாவான திருச்செந்தூர் 5-ம் திருவிழாவான பிப்ரவரி 18-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.30 மணிக்கு ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவகொழுந்தீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடவரு வாயில் தீபாராதனை நடைபெற உள்ளது.

மாசித் திருவிழாவின் 7-ம் திருநாளான பிப்ரவரி 20-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. 4.30 மணிக்கு உருகு சட்டசேவை நடக்கிறது. தொடர்ந்து காலை 8.45 மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார்..

திருச்செந்தூர் மாசித் திருவிழா 8-ம் திருநாள் அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்க உள்ளார்.

திருச்செந்தூர் மாசித் திருவிழாவின் சிகர நிகழ்வான 10-ம் திருநாளான பிப்ரவரி 23-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று காலையில் 6.30 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.

மாசித் திருவிழா 11-ம் திருநாளான பிப்ரவரி 24-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமியும், அம்மாளும் 11 முறை தெப்பத்தில் சுற்றும் தெப்ப உற்சவம் நடைபெறும்*