500 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில்,சிறுவாபுரி

6 வாரத்தில் சொந்த வீடு / திருமணம் / குழந்தை பாக்கியம் கேட்ட வரம் அருளும் சிறுவாபுரி முருகன் பற்றி தெரிந்து கொள்வோம்!

500 ஆண்டுகள் பழமையான முருகன் கோயில்,சிறுவாபுரி, அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்!

மூலவர்: பாலசுப்பிரமணியர்

பழமை: 500 வருடங்களுக்கு முன்
ஊர்: சிறுவாபுரி

கோயில்: ஐந்து நிலை இராஜகோபுரம் உடையது.

சிறுவர்களான லவ-குசா இருவரும் ராமருடன் போரிட்டு வெற்றி பெற்ற தலமாதலால் இந்த இடம் சிறுவர்+அம்பு+எடு= சிறுவரம்பெடு (தற்போது சின்னம்பேடு என்றும், சிறுவை, சிறுவர்புரி, சிறுவாபுரி என்றும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

மயில் மேலேறிவந்து அருணகிரி நாதருக்கு முருக பெருமான் காட்சி கொடுத்த ,இத் தலத்துக்கு 4 திருப்புகழ் பாடல்கள் உள்ளன.

மூலவர் பாலசுப்பிரமணியர் 41/2 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.இந்த சிறுவாபுரி ஆலயத்தில் உள்ள பிற சன்னதிகள், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன், ஆதி விநாயகர், நாகர், பைரவர், முனீஸ்வரர், அருணகிரிநாதர், உற்சவ மூர்த்தியாக திருமணக் கோலத்தில் உள்ள வள்ளி -முருகன், நான்கு கரங்களுடன் ஆதி முருகப் பெருமான் மற்றும் சண்டிகேஸ்வரர்.

மூலவர் : பாலசுப்பிரமணியர்

ஊர் : சிறுவாபுரி, சின்னம்பேடு

மாவட்டம் : திருவள்ளூர்

முகவரி:

அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

சிறுவாபுரி- 601206

திருவள்ளூர் மாவட்டம்.

போன்:

+91- 44 2471 2173, 9444280595, 9444171529