பிரபலங்களின் பிரதான கோயிலாக மாறிய சிறுவாபுரி

பிரபலங்களின் பிரதான கோயிலாக மாறிய சிறுவாபுரி முருகன் கோயில் 🕉️ Siruvapuri Murugan Temple Today!

பிரபலங்களின் பிரதான கோயிலாக மாறிய சிறுவாபுரி முருகன் கோயில்! Siruvapuri Murugan Temple Today!

கனவை அத்தனை எளிதாக அடைந்து விட முடிவதில்லை. கையில் பணமிருந்தும் சொந்த வீடு அமையாதவர்கள் பலர் உண்டு. ஆனால், அப்படியெல்லாம் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் உள்ளத்தின் உந்துசக்தியாக இருந்து உங்களுக்குரிய சொந்த வீட்டை அமைத்துத் தருகின்றேன் என்கிறார், சிறுவாபுரி முருகன்.

ஆம், சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள். குறிப்பாக சொந்தமாக வீடு அமையவேண்டும் என இங்கு வேண்டிக்கொள்ள வருபவர்களே அதிகம்.

20.08.2024 இன்று ஆவணி செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதலே அலைமோதியது.